×

சிறுவன் மாயம்

கிருஷ்ணகிரி, ஜூன் 15: கிருஷ்ணகிரி அடுத்த வகாப் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திக் நாதன்(14). இவர் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுசீலா தாலுகா போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnan ,Vakab Nagar ,Karthik Nathan ,
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை